இந்துக்களை கொல்ல எங்களுக்கு 1 மணி நேரம் போதும்!

இந்துக்களை கொல்ல எங்களுக்கு 1 மணி நேரம் போதும்!

Share it if you like it

இந்தியாவில் உள்ள அனைத்து சங்கிகளையும் அதாவது ஹிந்துக்களை கொல்ல எங்களுக்கு ஒரு மணிநேரம் போதும் என எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக அப்பாவி இளைஞர்கள் போராடி வருகின்றனர். இதன் பின்னணியில் எதிர்க்கட்சிகளின் தூண்டுதல் உள்ளது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதனைமெய்ப்பிக்கும் வகையில், தொடர்ந்து பல்வேறு காணொளிகள் வந்த வண்ணம் உள்ளது. பத்திரிக்கையாளர் ஒருவர் அக்னீபாத் தொடர்பாக கேள்வி ஒன்றினை போராட்டம் நடத்திய இளைஞரிடம் கேட்கிறார் அதற்கு, அந்த இளைஞர் எனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவிக்கிறார். இப்படியாக, இந்த போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்று கொண்டு இருக்கிறது.

குறிப்பாக, அக்னீபாத் திட்டத்தை எதிர்த்து மாற்று திறனாளி ஒருவர் போராட்டம் நடத்திய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர், எதற்கு போராட்டம் நடத்த வேண்டும் என்பதே அனைவரின் கேள்வியாக இருந்து வருகிறது. இப்படிபட்ட சூழலில், எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த பெண்மணி நிர்வாகி ஒருவர் பேசிய காணொளி ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் பேசியதாவது ;

வடமாநிலங்கள் தீ பற்றி எரிகிறது. இதை உங்களால் சமாளிக்க முடியவில்லை. இதேபோல, நாங்கள் களத்தில் இறங்கினால் உங்களால் சமாளிக்க முடியுமா? இன்றைக்கு, ஒரு மணிநேரம் இஸ்லாமியர்களுக்கு நேரம் கொடுத்து பாருங்கள். அந்த ஒரு மணி நேரம் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்த இந்திய தேசத்தில் ஒரு சங்கி கூட அதாவது ஹிந்துக்கள் உயிரோடு இருக்க மாட்டான் என்று கூறியுள்ளார். இஸ்லாமியர்கள் இதற்கு தயாராக இருப்பதாக மிரட்டல் விடுக்கும் வகையில் அக்காணொளி அமைந்துள்ளது. அப்பெண்மணியின், கருத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, எஸ்.டி.பி.ஐ கட்சியை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என நாடு முழுவதிலுமிருந்து கோரிக்கை எழுந்து வருகிறது. இந்நிலையில், இக்காணொளி தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Share it if you like it