கேரளாவிற்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த தமிழக பா.ஜ.க..! தலைமறைவான உள்ளூர் போராளிகள்..!

கேரளாவிற்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த தமிழக பா.ஜ.க..! தலைமறைவான உள்ளூர் போராளிகள்..!

Share it if you like it

ஊரங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி மற்றும் இன்னும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் தங்களால் இயன்ற உதவிகளை தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் செய்தனர் இன்று வரை செய்தும் வருகின்றனர். கொரோனா தொற்று தமிழகத்தில் மிக தீவிரமாக இருந்த சமயத்திலும் சரி, பயங்கரமான புயல் தமிழகத்தை தாக்கிய பொழுதும் சரி, ஏழை, எளியவர்களுக்கு, தக்க சமயத்தில் தேவையான உணவு, உடை, பால், பழம் மற்றும் அவர்கள் தங்குவதற்கு மாற்று இடம் முககவசம், கிருமி நாசினி, உட்பட பல உதவிகளை பா.ஜ.க, ஆர்.எஸ். எஸ் அமைப்பினர் வழங்கியதை யாரும் மறந்திருக்க முடியாது.

கேரள மாநிலத்தை மிகப் பெரிய புயல் அண்மையில் புரட்டி போட்டது. இதில் பலர் தங்கள் வீடுகளையும், கால் நடைகளையும், உடைமைகளையும், இழந்து தவித்து வரும் இவ்வேளையில் கேரள மாநில மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை பல தொண்டு நிறுவனங்கள் ஆர்.எஸ்.எஸ். சேவா பாரதி, மற்றும் பா.ஜ.க உட்பட பலர் செய்து வருகின்றனர்.

எதற்கெடுத்தாலும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வை விமர்சனம் செய்து வரும் தமிழக போராளிகள், சில்லறை ஊடகங்கள், போலி நெறியாளர்கள், பத்திரிக்கையாளர்கள்,தி.க, விசிக, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தோழர்கள், உட்பட யாரும் தமிழக பா.ஜ.க-வின் உதவியை பாராட்ட மனம் இல்லாமல் தொடர்ந்து கள்ள மெளனம் காத்து வரும் நிலையில், மோடி ஒழிக, பா.ஜ.க ஒழிக, என்று எதற்கெடுத்தாலும் கூவி வரும் அருணன், சுந்தரவள்ளி, போன்றவர்கள் கேரள மக்களுக்கு என்ன உதவிகளை செய்து உள்ளனர் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it