மலக்குழி கவிதையை தொடர்ந்து பிராமணர்களை இழிவுபடுத்தி வீடியோ… திராவிட கும்பல் அத்துமீறல்!

மலக்குழி கவிதையை தொடர்ந்து பிராமணர்களை இழிவுபடுத்தி வீடியோ… திராவிட கும்பல் அத்துமீறல்!

Share it if you like it

பகவான் ராமர், சீதா பிராட்டியை இழிவுபடுத்தி மலக்குழி கவிதை வாசிக்கப்பட்ட நிலையில், தற்போது பிராமணர்களை துப்புரவு தொழிலாளர்களாக சித்தரித்து திராவிட கும்பல் வீடியோ வெளியிட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருப்பவன் விடுதலை சிகப்பி என்கிற விக்னேஸ்வரன். இவன், கடந்த ஏப்ரல் மாதம் 30-ம் தேதி அபிராமபுரம் முத்தமிழ் பேரவை சார்பில் சென்னை ராஜரத்தினம் அரங்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மலக்குழி மரணங்கள் என்கிற தலைப்பில் ஒரு கக்கூஸ் கவிதையை வாசித்தான். அக்கவிதையில் ஹிந்து கடவுள்களான ராமர், சீதா பிராட்டி, ஹனுமன் ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் மலக்குழியை சுத்தப்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தான். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி ஹிந்துக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதுகுறித்த புகாரின்பேரில் அவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், பிராமணர்களை இழிவுபடுத்தி வீடியோ ஒன்று வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, பிராமணர்களை துப்புரவு பணியாளர்களாக சித்தரித்து எடுக்கப்பட்டிருக்கும் அந்த வீடியோவில், பிராமணர்களை தீண்டத்தகாத சமூகத்தைச் சேர்ந்தவர்களைப் போலவும் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். மேலும், துப்புரவு பணி செய்யும் பிராமணர்களை, சுயமரியாதை இல்லாதவர்களாகவும் காட்டி இருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. குறிப்பாக, திராவிட கும்பல்கள் இக்காணொளியை வைரலாக்கி வருகிறார்கள். இந்த வீடியோ பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

திராவிட கும்பல் பிராமணர்களையும், ஹிந்து கடவுள்களையும் இழிவுபடுத்தும் செயலை தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it