ஐயப்ப பக்தர்கள் அரிசி கடத்தல்காரர்கள்: சுப.வீ. திமிர் பேச்சு!

ஐயப்ப பக்தர்கள் அரிசி கடத்தல்காரர்கள்: சுப.வீ. திமிர் பேச்சு!

Share it if you like it

ஐயப்ப பக்தர்களை கடத்தல்காரர்கள் என்று சொல்லி, சுப.வீ. என்று அழைக்கப்படும் சுப.வீரபாண்டியன் இழிவுபடுத்தி இருக்கும் விவகாரம் பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

திராவிட இயக்க தமிழ்ப் பேரவை என்கிற அமைப்பின் பொதுச்செயலாளராக இருப்பவர் சுப.வீரபாண்டியன். தற்போது தமிழ்நாடு பாடநூல் கழக அறிவுரைக் குழு உறுப்பினராக தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்டிருக்கிறார். கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட இவர், ஹிந்துக்கள் மற்றும் ஹிந்துக் கடவுள்களை நிந்தனம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். இவர் பேசிய பல கருத்துக்கள் அபத்தமானவை. கள்ளக்காதலுக்கு திருமணம் கடந்த உறவு என்று புதிய விளக்கம் கொடுத்தவர் இவர்தான். சமீபத்தில்கூட, பிரபல எழுத்தாளர் பத்ரி சேஷாத்திரியின் பூணூலை அறுப்பேன் என்று சர்ச்சையாகப் பேசி பரபரப்பை கிளப்பினார். மேலும், திராவிடர்களும் தமிழர்கள்தான். ஜாதி பேதமற்ற, பாலின பேதமற்றவர்கள் திராவிடர்கள் என்று மற்றொரு புதிய விளக்கத்தையும் கொடுத்தவர். இவரது பேச்சுக்கள் நெட்டிசன்களால் நகைப்புக்கும், கேலி கிண்டலுக்கும் ஆளாகும் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, பிரான்ஸ் தமிழச்சி என்பவரால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்.

இந்த நிலையில்தான், ஐயப்ப பக்தர்கள் பற்றி இழிவாகப் பேசி புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் சுப.வீரபாண்டியன். சென்னை மணியம்மை அரங்கத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சுப.வீரபாண்டியன், “தமிழகத்திலிருந்து ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் வழக்கம் 1960-ம் ஆண்டுகளின் மத்தியில்தான் தொடங்கியது. நடிகர் நம்பியார் உள்ளிட்ட பிரபலங்கள் ஐயப்பன் கோயிலுக்குச் செல்லவே, பக்தர்களின் எண்ணிக்கையும் கூடத் தொடங்கியது. ஆனால், ஐயப்பன் கோயிலுக்குச் செல்வதற்காக அடிப்படையும், தேவையும் எங்கே இருக்கிறது என்பதை நான் சொன்னால் பலருக்கும் வியப்பாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். தமிழகத்தில் அரிசிப் பஞ்சம் மிகக் கடுமையாக இருந்த காரணத்தால், லாரிகள் தமிழக எல்லையைத் தாண்டி கேரளாவுக்குச் செல்லக்கூடாது என்று சட்டம் விதிக்கப்பட்டது. ஏனெனில், அப்போது கேரளாவிலும் அரிசிப் பஞ்சம் இருந்தது. இப்படி லாரிகள் போவது தடுக்கப்பட்டது என்பதால்தான் தமிழர்கள் தலையில் வைத்து அரிசி கொண்டு போகப்பட்டது என்பது உண்மை.

இதுதான் சபரிமலைக்குச் செல்வதின் தொடக்கம். லாரியில்தானே கொண்டு போகக் கூடாது, தலையில் கொண்டுபோனால், அதுவும் இருமுடி கட்டி பக்தி என்கிற பெயரால் கோயிலுக்குக் கொண்டு போனால் என்ன செய்ய முடியும் என்று கொண்டு செல்லத் தொடங்கி, பின்னர் அதுவே வழக்கமாகி விட்டது” என்று கூறியிருக்கிறார். அதாவது, தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. அப்படி லாரிகளில் கடத்த முடியாதபோது, ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டிச் செல்வதுபோல தலைச்சுமையாக ரேஷன் அரிசி கடத்தப்பட்டது என்கிற அர்த்தத்தில் சுப.வீரபாண்டியன் கூறியிருக்கிறார். இவரது இந்த பேச்சுதான் ஐயப்ப பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஐயப்ப பக்தர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் சுப.வீரபாண்டியனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it