தமிழர்களை இழிவுபடுத்திய பெரியாரிஸ்ட்!

தமிழர்களை இழிவுபடுத்திய பெரியாரிஸ்ட்!

Share it if you like it

தமிழையும், தமிழர்களை மிகவும் இழிவாக பேசியவர் ஈரோட்டைச் சேர்ந்த வெ.ராமசாமி. தற்போது அவரது வழியில் வந்த பெரியாரிஸ்ட்களும் தமிழர்களை இழிவுபடுத்தி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் திராவிடர் கழகம் என்கிற பெயரில் ஒரு அமைப்பை நடத்தி, தமிழையும், தமிழர்களையும் இழிவுபடுத்தியவர் ஈரோடு வெ.ராமசாமி. அப்போதும் தமிழர்கள் சொரணையற்றவர்களாக இருந்ததோடு, தங்களை இழிவுபடுத்துவதை அறியாமலேயே அவரது பேச்சுக்கு கைதட்டிக் கொண்டிருந்தனர். விளைவு, தமிழ்நாட்டை திராவிட நாடாக மாற்றக் கோரிக்கை வைத்தார்கள். ஆனால், மத்திய அரசு கிடுக்கிப்பிடி போடவே, திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டார்கள். எனினும், தமிழ்நாட்டில் இருந்து கொண்டு திராவிட மாடல் என்று அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதோடு, தமிழையும், தமிழர்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், தற்போது திருச்சியைச் சேர்ந்த பெரியாரிஸ்ட் சரவணன் என்பவன் தமிழர்களை மிகவும் இழிவாகப் பேசி இருக்கிறான். இதுகுறித்து அவன் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தமிழர்கள் கோழைகள். எதிரி படையெடுத்து வந்தால் பயந்துகொண்டு மனைவி, குழந்தைகளுடன் தீயில் இறங்கி விடுவான். அரசியல் தலைவர்கள் இறந்து விட்டால் அதற்கும் தீக்குளிப்பான். இந்திரா காந்தி இறந்தபோது தமிழகத்தில் ஒருவன் தீக்குளித்தான். டெல்லியில் ஒருவன் தீக்குளித்தான். டெல்லியில் தீக்குளித்தவன் யாரென்று பார்த்தால் அவனும் தமிழன்தான்” என்று கூறியிருக்கிறான்.

இந்த பெரியார் சரவணன் யாரென்றால், திராவிட இயக்கங்களில் இருக்கும் பெண்களை எல்லாம் திருமணம் கடந்த உறவுக்கு அழைப்பவன் என்று பிரான்ஸ் தமிழச்சியால் சமூக வலைத்தளங்களில் கிழித்து தொங்க விடப்பட்டவன். இவன் பேசிய இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து விட்டு, கொதித்துப்போன தமிழர்கள், பெரியார் சரவணனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இவன் தமிழர்களை பற்றி இன்னும் எவ்வளவு கேவலமாகப் பேசியிருக்கிறான் என்பதை கீழே உள்ள வீடியோவில் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்…


Share it if you like it