உதயநிதி வரும் வழியில் செருப்பு… பதறிய அமைச்சர்… தனது கையால் எடுத்து அப்புறப்படுத்திய காணொளி வைரல்!

உதயநிதி வரும் வழியில் செருப்பு… பதறிய அமைச்சர்… தனது கையால் எடுத்து அப்புறப்படுத்திய காணொளி வைரல்!

Share it if you like it

உதயநிதி ஸ்டாலின் வரும் வழியில் கிடந்த செருப்பை தனது கையால் எடுத்து அமைச்சர் சேகர்பாபு அப்புறப்படுத்திய செயல் பொதுமக்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் மற்றும் திருவல்லிகேணி-சேப்பாக்க சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவரது, 45-வது பிறந்த நாள் விழா நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை, அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மிகச் சிறப்பாக கொண்டாடினர். அந்தவகையில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அறிஞர் அண்ணாத்துரை நினைவிடங்களுக்கு உதயநிதி சென்றார். அப்போது, அவருடன் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா, பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யா மொழி மகேஷ் மற்றும் ஹிந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டவர்கள் சென்று இருந்தனர்.

மறைந்த தலைவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தி விட்டு திரும்பி வருகையில் அவரது வழியில் செருப்பு ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்து பதறிய ஹிந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் தனது கைகளால் அந்த செருப்பினை அப்புறப்படுத்தி உதயநிதி செல்வதற்கு வழி அமைத்து கொடுத்த காணொளிதான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it