வருங்கால முதல்வரே என கூவிய வி.சி.க. நிர்வாகி… மகிழ்ச்சியில் திளைத்த   திருமாவளவன்!

வருங்கால முதல்வரே என கூவிய வி.சி.க. நிர்வாகி… மகிழ்ச்சியில் திளைத்த திருமாவளவன்!

Share it if you like it

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை அக்கட்சியின் தொண்டர் வருங்கால முதல்வரே என கத்திய காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணியில் உள்ள கட்சி வி.சி.க. இக்கட்சியின், தலைவர் திருமாவளவன். இவர், தி.மு.க.விடம் கெஞ்சி கூத்தாடி கடந்த 2019- ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு சீட்டுகளை பெற்றார். இதை தொடர்ந்து, கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் 6 எம்.எல்.ஏ. சீட்டுக்களை தி.மு.க.விடமிருந்து பெற்றார். இப்படியாக, வி.சி.க.வின் வளர்ச்சி இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழல்நிலையில், வி.சி.க. தொண்டர் ஒருவர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த வி.சி.க. தலைவர் திருமாவளவனை பார்த்து வருங்கால முதல்வரே என்று கூவியிருக்கிறார். அந்த கூவலை கேட்டு திருமாவளன் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்திருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it