தமிழ்நாட்டில் நடப்பது சாராய வியாபாரியின் ஆட்சி திருமாவின் காணொளி வைரல்!

தமிழ்நாட்டில் நடப்பது சாராய வியாபாரியின் ஆட்சி திருமாவின் காணொளி வைரல்!

Share it if you like it

தமிழ்நாட்டில் நடப்பது சாராய வியாபாரியின் ஆட்சி என வி.சி.க. தலைவர் பேசிய காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. நாங்கள், ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறினார். எனினும், இந்த அரசு அமைந்து இரண்டு வருடங்களை பூர்த்தி செய்துள்ளது. ஆனால், பூரணமதுவிலக்கு சட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இதனிடையே, தமிழகத்தில் மதுகுடிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேவேளையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளும் மதுவிற்கு அடிமையாகும் காணொளிகளை இன்றும் நாம் சமூகவலைத்தளங்களில் காண முடியும்.

இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசிய காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. அந்த காணொளியில், தமிழ்நாட்டில் நடப்பது சாராய வியாபாரியின் ஆட்சிதான் என்று பேசியிருக்கிறார். இந்த காணொளியை நெட்டிசன்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.


Share it if you like it