மயங்க் அகர்வால் இரட்டைசதம் விளாசல்

மயங்க் அகர்வால் இரட்டைசதம் விளாசல்

Share it if you like it

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றது. மூன்று போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. முதலாவது டெஸ்ட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்றுவருகிறது. இதில் இரண்டாம்நாள் ஆட்டமான இன்று இந்தியாவின் மயங்க் அகர்வால் இரட்டைசதம் அடித்து அசத்தினார். கடந்த எட்டு ஆட்டங்களில் 3 மூன்று சதம் மற்றும் ஒரு இரட்டை சதம் என மயங்க் வாழ்வின் உச்சபட்ச பார்மில் உள்ளார். முதலில் ஆடிய வங்கதேசஅணி 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 414 ரன்களுடன் தொடர்ந்து விளையாடி வருகின்றது. மயங்க் 243 ரன்களுடன் களத்தில் உள்ளார்.


Share it if you like it