சல்லாப நடனம் சர்ச்சையில் சிக்கிய தி.மு.க நிர்வாகி!

சல்லாப நடனம் சர்ச்சையில் சிக்கிய தி.மு.க நிர்வாகி!

Share it if you like it

ஆபாச நடனம், கறிவிருந்து சர்ச்சையில் சிக்கிய தி.மு.க நிர்வாகி அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்.

தி.மு.க ஆட்சியில் பெண்கள், பள்ளி மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அந்தவகையில் தான், இச்சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றிய குழு தலைவராக இருப்பவர் துரைராஜ். இவர், தி.மு.க உறுப்பினராக இருந்து வருகிறார். அந்தவகையில், கடந்த உள்ளாட்சி தேர்தலில் தனது வெற்றிக்காக உழைத்த தனது ஆதரவாளர்களுக்கு மது மற்றும் கறி விருந்து அளித்து இருக்கிறார். இதுதவிர, இரண்டு நடன அழகிகளை வரவழைத்து ஆபாச நடனம் ஆட வைத்து உள்ளார். இக்காணொளிதான், தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால், தி.மு.க தலைமைக்கு பொதுமக்களிடமிருந்து புகார்கள் குவிந்த வண்ணம் இருந்து வருகிறது.

தஞ்சை மேயர் பாரம்பரிய அங்கியுடன் உதயநிதி ஸ்டாலின் காலில் விழுந்து ஆசி வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த இந்த நிலையில் தான், அந்தநல்லூர் ஒன்றிய குழு தலைவரின் வீடியோ பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it