கலைஞர் மீது ஆணையாக ஒரு பைசா லஞ்சம் வாங்க மாட்டோம் எம்.எல்.ஏ. நந்தகுமார் முன்பு உறுதிமொழி எடுத்து கொண்ட திமுக வேட்பாளர்கள்..!

கலைஞர் மீது ஆணையாக ஒரு பைசா லஞ்சம் வாங்க மாட்டோம் எம்.எல்.ஏ. நந்தகுமார் முன்பு உறுதிமொழி எடுத்து கொண்ட திமுக வேட்பாளர்கள்..!

Share it if you like it

வேலூர் மாவட்டம் குடியாத்தம், காட்பாடி பேரணாம்பட்டு, கே வி குப்பம், உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 6 ஆம் தேதி நடைபெறும் நிலையில் தேசிய கட்சிகள், சிறிய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என்று பலர் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் குடியாத்தம் ஒன்றியம் கொண்டசமுத்திரம் ஊராட்சியில் திமுக சார்பாக ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு சத்யானந்தம் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் பதவிக்குப் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய கொண்டசமுத்திரம் பகுதிக்கு வந்த வேலூர் மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான நந்தகுமார் பிரச்சார வாகனத்தில் வேட்பாளர்களை நிறுத்தி பிரச்சாரம் செய்தார்.

அப்போது பொதுமக்களிடையே இலவச வீட்டுமனைப்பட்டா வாங்கவோ முதியோர், விதவை பென்ஷன் வாங்கவோ  மற்ற எதற்கும் பொதுமக்களிடம் ஒரு பைசா லஞ்சம் வாங்க மாட்டோம் என்றும் இது கலைஞர் மீது ஆணையாக என்று உறுதிமொழி எடுக்கிறோம் என்று வேட்பாளர்கள் எம்எல்ஏ நந்தகுமார் முன்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இதனை அடுத்து நெட்டிசன்கள் வழக்கம் போல தங்களது கருத்தினை இவ்வாறு பதிவு செய்து உள்ளனர்.

  • ஒரு பைசா தானே வாங்க மாட்டோம் சொன்னோம் .. அதுக்கு மேலே வாங்குவோம்.
  • ஏங்க இதெல்லாம் நம்புர மாரியா இருக்கு?
  • நீங்க லஞ்சம் வாங்கமாட்டனு சத்தியம் பன்னதக் கூட ஏத்துக்கலாம்.. ஆனால் கருணாநிதி மேல சத்தியம் பண்ணபாரு அததான்டா ஜீரணிக்க முடியல.
  • என்னையா இப்படி எல்லாம் காமெடி பன்றிங்க… லஞ்சம் வாங்க மாட்டோம்னு சும்மா சொன்னா கூட நம்புவாங்க.. ஆனா கருணாநிதி மேல சத்தியம் பண்ணிங்க தெரியுமா அப்போவே உங்கள யாரும் நம்ப மாட்டாங்க.. ஏன்னா தலைவன் வரலாறு அப்படி.
  • டேய் அதுக்கு நீங்க சும்மாவே ஓட்டு கேளுங்கடா… உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா
  • அடேய் கொஞ்சம் அளவா காமெடி பண்ணுங்கடா.
  • கருணாநிதியே இத நம்ப மாட்டாரு…

நன்றி; நியூஸ் 18


Share it if you like it