வங்கியில் வெடிகுண்டு அங்கி… மர்ம நபரால் பரபரப்பு!

வங்கியில் வெடிகுண்டு அங்கி… மர்ம நபரால் பரபரப்பு!

Share it if you like it

வங்கியில் புகுந்த மர்ம நபர் போலி வெடி குண்டை காட்டி மிரட்டிய சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலங்கானா மாநிலம், மேட்ச்சல் மாவட்டம் ஜி.டி. மெட்லா நகரில் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில், புகுந்த மர்ம நபர் ஒருவர், போலி வெடிகுண்டை காண்பித்து தனக்கு 2 லட்சம் ரூபாய் பணத்தை உடனே கொடுக்க வேண்டும். இல்லையெனில், வெடிகுண்டை வெடிக்க செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதையடுத்து, வங்கியில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அந்த நபரை மடக்கி பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it