தரமற்ற பாலம்… சுட்டிக்காட்டிய சமூக ஆர்வலர்கள்… கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க. நிர்வாகிகள்!

தரமற்ற பாலம்… சுட்டிக்காட்டிய சமூக ஆர்வலர்கள்… கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க. நிர்வாகிகள்!

Share it if you like it

தென்காசி மாவட்டத்தில் தரமற்ற முறையில் கட்டப்பட்டு வரும் புதிய பாலம் குறித்து, இணையத்தில் வீடியோ பதிவிட்ட தன்னார்வலர்களுக்கு தி.மு.க. நிர்வாகிகள் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பேரூராட்சித் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த ராஜன் என்பவர் இருந்து வருகிறார். இந்த சூழலில், கீழப்பாவூர் பெரியகுளத்தில் 3 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இப்பாலத்தின் பில்லர்கள் உள்ளிட்ட பணிகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இப்பாலம் தி.மு.க. தலைவர் ராஜனுக்கு, மிகவும் நெருக்கமானவர் கான்ட்ராக்ட் எடுத்து செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாலம் தரமற்று கட்டுப்பட்டு வருவது குறித்து கீழப்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த பசுமை இயக்க இளைஞர்கள் சிலர், வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த தலைவர் ராஜன், தனது அடிப்பொடிகளை தட்டிவிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, தி.மு.க. நிர்வாகிகள் சிலர், பசுமை இயக்க இளைஞர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். இதுகுறித்தும் அந்த இளைஞர்கள் வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள். தவறை தட்டிக்கேட்ட சமூக ஆர்வலர்களுக்கு தி.மு.க.வினர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it