ஆட்சியில இருக்கணுமா வேணாமா… தி.மு.க.வுக்கு எதிராக கொந்தளித்த தி.மு.க. எம்.எல்.ஏ.வால் பரபரப்பு!

ஆட்சியில இருக்கணுமா வேணாமா… தி.மு.க.வுக்கு எதிராக கொந்தளித்த தி.மு.க. எம்.எல்.ஏ.வால் பரபரப்பு!

Share it if you like it

எடப்பாடி ஆட்சியை தூக்கி எறிந்ததுபோல தி.மு.க. ஆட்சியையும் தூக்கி எறிய தயங்க மாட்டோம் என்று தி.மு.க. எம்.எல்.ஏ.வும், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருமான வேல்முருகன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவராக இருப்பவர் வேல்முருகன். பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் இவர், சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுவிக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, எதிர்வரும் ஜூன் 3-ம் தேதி மேற்கண்ட அறிவிப்பை வெளியிட வேண்டும். ஆயுள் கைதிகளாக இருக்கும் இஸ்லாமியர்களை விடுவிக்க வேண்டும் என்று தேர்தலுக்கு முன்பு நாங்கள் போராட்டம் நடத்தியபோது, அப்போராட்டத்தில் தி.மு.க.வின் முக்கியத் தலைவர்கள் கலந்துக் கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

அப்படி இருக்க, தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, அது பற்றி பேசாமல் இருப்பது எந்த வகையில் நியாயம். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியின்போது, எங்கள் கூட்டமைப்பு முன்னெடுத்த போராட்டங்களால்தான், அந்த ஆட்சி தூக்கி எறியப்பட்டது. அந்த நிலைக்கு எங்களை தி.மு.க.வும் தள்ளிவிட வேண்டாம் என்று எச்சரிக்கை செய்ய கடமைப்பட்டுள்ளேன். ஒருவேளை எங்களது கோரிக்கையை நிறைவேற்றத் தவறினால் ஜூன் மாத இறுதியில் அரசுக்கு எதிராக கோட்டை நோக்கி பேரணியாகச் செல்வோம்’’ என்று கூறியிருக்கிறார். தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வரும் வேல்முருகன் தி.மு.க.வுக்கு எதிராக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it