உங்கள் நண்பர் ‘மீ டூ’ புகழ் வைரமுத்து மீது நடவடிக்கை எடுங்களேன்… ஸ்டாலினுக்கு பாடகி சின்மயி ‘நச்’ ட்வீட்!

உங்கள் நண்பர் ‘மீ டூ’ புகழ் வைரமுத்து மீது நடவடிக்கை எடுங்களேன்… ஸ்டாலினுக்கு பாடகி சின்மயி ‘நச்’ ட்வீட்!

Share it if you like it

‘மீ டூ’ புகழ் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தி இருக்கிறார் பிரபல பாடகி சின்மயி.

பா.ஜ.க. எம்.பி.யும், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஜன் சரண் சிங் மீது, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார். அதில், செங்கோல் வளைந்து விட்டது என்று குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது. இதற்கு பா.ஜ.க. தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், 19 பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான உங்களுக்கு நெருக்கமான கவிஞர் வைரமுத்து மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.

இந்த நிலையில்தான், பிரபல பாடகி சின்மயி, 17 பெண்கள் பாலியல் புகார் கொடுத்த கவிஞர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலினிடம் வலியுறுத்தி இருக்கிறார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் சின்மயி. அப்பதிவில், “இந்தியாவில் எந்த மாநிலத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழும்போதும், நீங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறீர்கள். அரசியல் கட்சித் தலைவர்கள் பேசும்போது மாற்றம் வரும் என்கிற நம்பிக்கை பிறக்கிறது. ஆனாலும், பாலியல் சுரண்டல்கள், தொல்லைகள் குறைந்தபாடில்லை. போக்ஸோ உள்ளிட்ட சட்டங்கள் இருந்தும், அனைத்து துறையிலும் பாலியல் குற்றச்சாட்டு எழத்தான் செய்கிறது.

குறிப்பாக, திரைத்துறையில் இன்றும் பாலியல் குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. உங்கள் நண்பரும், ஆதரவாளருமான கவிஞர் வைரமுத்துவின் மீது 17-க்கும் மேற்பட்ட பெண்கள் புகாரளித்தும், உங்கள் பாதுகாப்பில் அவர் மகிழ்ச்சியுடன்தான் இருக்கிறார். இதனால், அவர் குறித்து பெண்கள் மேலும் பேச முடியாதவாறு செய்கிறார். தமிழகத்தில் வேறு அரசியல்வாதிகளே இல்லை என்பதுபோல், உங்கள் கட்சி தொடர்ந்து அவரை முன்னிலைப்படுத்துகிறது. எங்கள் அனைவரின் திறமையைவிட வைரமுத்து திறமை பெரிதொன்றும் இல்லை. இது உங்கள் கண் எதிரே நடக்கிறது. எனவே, தேவையானதை செய்யுங்கள். அப்போதுதான், தமிழ்நாட்டில் உள்ள பணியிடங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும்.

எனது துறையில் இதுபோன்றவர்கள் இனி வரக்கூடாது என்பதற்காக நான் பேசுகிறேன். ஆனால், அவரால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் அவரது அரசியல் தொடர்புகளுக்காக வெளியே பேச பயப்படுகிறார்கள். எனது ஊடகத்தில் பெண் குழந்தைகள் எல்லாம் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுங்கள். போக்ஸோ, ஐ.சி.சி. உள்ளிட்ட அமைப்புகள் சரியாக செயல்பட தயவு செய்து ஆவண செய்யுங்கள். எங்கள் துறையில் அனைத்து இடங்களிலும் பாலியல் அத்துமீறல்களை தடுக்க வழிவகை செய்யுங்கள். தொலைக்காட்சியில் குழந்தைகள் நிகழ்ச்சியை டி.வி.யில் தொகுத்து வழங்கியபோது ரமேஷ் பிரபா குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அவரது பெயரும் வெளியானது. எனவே, அனைத்துக்கும் ஆவண செய்ய வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார். 


Share it if you like it